ஜெய் குருதேவ் !!
என்னதான் இருந்தாலும் , அவங்கவங்களுக்கு அவங்க தாய் மொழி அமிர்தம்தாங்க , இல்லையா ?!
தமிழ்
கேட்க இனிக்கும் ...
பேச இனிக்கும்
எழுத இனிக்கும்
படிக்க இனிக்கும்
அட ...
பழகவும் இனிக்குங்க !!
************************************************************************************************************
நம்ம தமிழே ஒவ்வொரு ஊரிலும் , ஒவ்வொரு விதமா பேசப்படுகிறதில்லையா ...
சென்னைத் தமிழ் , நெல்லைத் தமிழ் , கோவைத் தமிழ் , மதுரைத் தமிழ் அப்படின்னுட்டு .
இந்த கோவைத் தமிழ் எடுத்துகிட்டம்னா ,
ஒரே மரியாதை தான் போங்க !!
சும்மா , வார்த்தைக்கு ஒரு "ங்க" சேர்த்து , மரியாதை மழையா பொழிஞ்சு தள்ளிடுவாங்கன்னா பார்த்துக்கோங்களேன் !!
கோவைக்கு மாற்றலாகி போன , நம்ம நண்பர் ஒருவர் சொன்னாரு ,
" அட , அதை ஏன் கேட்கற ...
கோவையில , கன்னாபின்னான்னு சண்டை போட்டுக்கிறவங்க கூட , "வாங்க" , "போங்க " அப்படின்னு மரியாதை குறையாம தான் பேசிக்குவாங்க. பார்க்க ரொம்ப தமாஷா இருக்கும் !!"
அது அப்படின்னா , சென்னைத் தமிழ் அதுக்கு நேர்மாறா இல்ல இருக்கும் .
" இன்னாம்மா இன்னா ...படா பேஜாரு பண்ணிகினு கீறியே , ஒடம்பு எப்படி கீது ?"
தமிழ் எப்படி பேசக் கேட்டாலும் இனிக்கத்தான் செய்து !!
***********************************************************************************************************
நம்ம தமிழ்நாட்டுக்காரங்க மாதிரி யாரும் பழமொழியும் , குறள் ,ஆத்திசூடி போன்றவைகளை அன்றாட உரையாடல்களில் உபயோகிக்கிறதில்லைன்னு நினைக்கிறேன் .
எந்தவொரு காலக்கட்டத்துக்கும், நிலைமைக்கும் ஏற்றவாறு , எண்ணற்ற பழமொழிகளைச் சொல்லிவிட்டு சென்று விட்டார்களே நம் பெரியவர்கள் .
என் நண்பர் ஒருவர் , ஆச்சர்யம் மிகுந்த தொணியில கேட்பார் , "அதெப்படி எல்லாவற்றிற்கும் ஒரு பழமொழியை எடுத்துவிடுகிறீர்கள் , தமிழர்கள் நீங்கள் ?!" என்று . அவர் ஆர்வத்துடன் அதன் ஆங்கிலமொழி பெயர்ப்பையும் கேட்டு வியந்து போவதைக் கண்டு , நம் தமிழ் மீது , எனக்குப் பெருமையாக இருக்கும் .
***********************************************************************************************************
இடத்துக்கு தகுந்த மாதிரி மனுஷங்க தங்கள் பழக்க வழக்கங்களை மாத்திக்கிற மாதிரி ,
************************************************************************************************************
என் கூடப் பணி புரிபவர் ஒருவருக்கு தமிழ் கத்துக்கணும்னு ரொம்ப ஆசை .
உங்கள் சுவேதா
No comments:
Post a Comment